(சுலைமான் றாபி)
வெளியாகியுள்ள க.பொ.த. (உ/த) பரீட்சை முடிவுகளின் படி நிந்தவூர் அல் மஷ்ஹர் பெண்கள் உயர்தரப்பாடசாலையில் வர்த்தகப்பிரிவில் கல்வி பயின்ற மாணவி ஜே.பாத்திமா நிஹ்லா 3A சித்திகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் 2வது மாணவியாக சித்தியடைந்து சாதனை படைத்துள்ளார்.
இதேவேளை இதுவரைக்கும் வெளியாகியுள்ள முடிவுகளின் படி நிந்தவூரில் 04 மாணவிகள் 03A சித்திகளைப் பெற்றுள்ளனர். அதில் வர்த்தகப்பிரிவில் ஜே.பாத்திமா நிஹ்லா, மாவட்ட ரீதியில் - 02ம் இடத்தினையும், என். பாத்திமா ஜுமானா மாவட்ட ரீதியில் - 15ம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.
மேலும் கலைப்பிரிவில் எம்.வி.பாத்திமா ஜிஸ்னா, மாவட்ட ரீதியில் - 15ம் இடத்தினையும், எம்.யூ.இஸ்ஸத் ஜஹான், மாவட்ட ரீதியில் - 02ம் இடத்தினையும் பெற்று 03A சித்தியெய்துள்ளனர்.