News Update :

(வீடியோ இணைப்பு) உங்கள் PURSEஐ பின்புற பக்கற்றில் வைப்பவரா நீங்கள் ??? ஆபத்து இதோ உங்களுக்கு புதிய நேய்...

Written By ADMIN on Thursday, June 16, 2016 | 11:43 AM




(முஹம்மது ஸில்மி,
மருத்துவ மாணவன்-கிழக்கு பல்கலைக்கழகம்)


நாங்கள் நீண்ட நேரம் பின்புறத்தில் உள்ள பக்கற்றில் எங்களது பணப்பையை வைக்கும் போது இது ஏற்படுகிறது. இது கைப்பை கால் வலி ,சில நேரங்களில் ஹிப் பாக்கெட் நோய் , பணப்பை நரம்புத்தளர்வு , பணப்பை நியூரோபதி, கொழுப்பு பணப்பை சிண்ட்ரோம் அல்லது credit carditis என குறிப்பிடப்படுகிறது . நாள் முடிவில் அது உண்மையில்
Piriformis syndrome என்று அழைக்கப்படும் ஒரு மருத்துவ நிலையாகும்.

Piriformis நோய்க்குறி என்பது இடுப்புமூட்டுக்குரிய நரம்பு சுருக்கப்பட்டுள்ளது அல்லது piriformis தசை பிட்டம் மற்றும் குறைந்த தொடையில் இறங்கு இடுப்புமூட்டுக்குரிய நரம்பு பாதையில் மற்றும் காலில் கூச்ச மற்றும் உணர்வின்மை ,போன்றவை ஏற்படும் ஒரு நரம்பு கோளாறு ஆகும்.


கால் வலி கீழ் முதுகு இருந்து கால் வரை கீழே போகும் ஒரு மருத்துவ நிலையாகும் . இந்த வலி கால் வெளியே மீண்டும் ,அல்லது முன் கீழே போகலாம். பொதுவாக, அறிகுறிகள் மட்டுமே உடலின் ஒரு பக்கத்தில் உள்ளன. சில காரணங்கள் இருபுறமும் வலி ஏற்படலாம்.



வீடியோ இணைப்பு கீழே..


"wallet sciatica | Piriformis syndrome | Wallet Neuropathy or Hip Wallet Syndrome"

https://youtu.be/Vj08aAEnUSU

ஒருவருடைய போன் கேமராவை அவருக்கே தெரியாமல் திறந்து அங்கே நடப்பவற்றை எமது போனில் இருந்து பார்ப்பது எப்படி?



மனிதனின் தொழிநுட்ப தேவைகளை இன்று சந்தைக்கு அறிமுகமாகும் ஸ்மார்ட் போன்கள் பல்வேறு வகையில் பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் எமது தளத்தில் அண்மையில் எழுதப்பட்ட ஒரு சில பதிவுகளை கீழே காணலாம்.

ஆகவே இன்றைய பதிவிலும் மேலே குறிப்பிட்ட உபாயங்களுக்கு இணையான ஒரு உபாயத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.


இந்த பதிவை நான் இன்று எழுதுவதற்கு மிக முக்கிய காரணம், எமக்கு தெரிந்தவர்களோ அல்லது எம்முடைய சகோதரிகளோ தங்களுடைய ஸ்மார்ட் போனில் ஏதேனும் பிரச்சினை வந்தால், ரிப்பேர் சென்டர்-களுக்கு போனை கொடுத்து திருத்தி கொள்வார்கள். இவ்வாறன சந்தர்ப்பங்களின் ரிப்பேர் சென்டர்-களில் வேலை செய்வோர் உங்களது போனை உங்களுக்கே தெரியாமல் வேவு பார்க்க கூடிய ஏதேனும் ஒரு மென்பொருட்களை நிறுவுவதற்கான வாய்ப்பு உள்ளது.


ஆகவே இன்றைய பதிவில் எமது ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் மூலம் இன்னொருவருடைய ஸ்மார்ட் போனில் இருக்கும் கேமராவை அவருக்கு தெரியாமல் திறந்து அங்கே என்ன நடக்கிறது, அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பவற்றை எல்லாம் தெரிந்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.




மேலும் பின்பக்க கேமரா பின்பக்க கேமரா என்று இரண்டு கேமரா மூலமும் குறித்த நபர் செய்யும் அனைத்தையும் வேவு பார்க்க முடியும்.




நீங்கள் வேவு பார்க்கும் போது குறித்த நபரின் போனில் எந்தவிதமான மாற்றமும் நடக்காது. மேலும் அவருடைய போன் ஸ்க்ரீன் லாக்-இல் இருக்கும் போது கூட உங்களால் அவர்களின் போன் கேமராவை திறக்க முடியும். ஆனால் அவருடைய போனில் இன்டர்நெட் இணைப்பு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.



ஒருவருடைய போன் கேமராவை அவருக்கே தெரியாமல் திறந்து அங்கே நடப்பவற்றை பார்ப்பது எப்படி?


முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்களுக்கான ட்ரேகிங் செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.

அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பியுங்கள். இப்போது உங்களுடைய போன் மாடல், இந்த செயலியில் காட்டப்படும்.









அடுத்து உங்களது கூகுள் மின்னஞ்சல் கணக்கு மூலம், இந்த செயலியில் இணைந்து கொள்ளுங்கள்.











அடுத்து, இதே செயலியை நீங்கள் யாருடைய போனை ட்ரேக் செய்ய நினைக்கிறீர்களோ அவர்களுடைய போனில் நிறுவி, உங்களது போனில் வழங்கிய அதே கூகுள் மின்னஞ்சல் கணக்கு மூலம் லொகின் செய்யுங்கள்.




இப்போது உங்களது போனில் இந்த செயலியை ஆரம்பித்தால், நீங்கள் ட்ரேக் செய்ய நினைக்கும் குறித்த நபரின் போன் காட்டப்படும்.




அதிலே காணப்படும் கேமரா ஐகான்-ஐ கிளிக் செய்யுங்கள்.






அடுத்து சிறிய கேமரா ஐகான் ஒன்று தோன்றும். அதை கிளிக் செய்யுங்கள்.









இப்போது குறித்த நபரின் கேமரா திறக்கப்படும். அதிலே அங்கே நடப்பவை அனைத்தையும் உங்களால் பார்க்கவும் கேட்கவும் முடியும்.




ஆகவே குறித்த நபர் ஒருவரின் போனை அவருக்கே தெரியாமல் ட்ரேக் செய்யக்கூடிய இந்த செயலியின் இலவச பதிப்பு கூகுள் ப்லே ஸ்டோரில் கிடைக்கும். ஆனால் இலவச பதிப்பிலே குறிப்பிட்டளவான வசதிகள் மட்டுமே உண்டு. ஆகவே இந்த செயலியின் பனம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பை கீழே குறிப்பிட்டிருக்கும் முறை மூலம் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

'சிங்க லே' முளையிலே கிள்ளிவிட வேண்டும் - ஹக்கீம் ஆவேசம்

Written By ADMIN on Saturday, January 9, 2016 | 9:13 AM




'சிங்க லே' முளையிலே கிள்ளிவிட வேண்டும் - ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.


இந்த விவகாரம் தொடர்பில் விவஸ்தையில்லாமல் இருக்க முடியாது எனவும் பகிரங்கமாக இதனை தட்டிக்கழிக்க முடியாது எனவும் ரவூப் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த விவகாரத்தை பக்குவமாகவும், அவதானமாகவும் கையாள வேண்டுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சியையும், விக்னேஸ்வரனையும் விளாசித்தள்ளும் விமல் வீரவன்ச





வடிகானை சுத்தம் செய்யுமாறு இராணுவத்தினருக்கு கூறும் அளவிற்கு வட மாகாண முதலமைச்சருக்கு நல்லாட்சி அரசாங்கம் பலத்தை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.


நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு நேற்றுடன் ஒராண்டு பூர்த்தி அடைகின்ற நிலையில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


அங்கு தொடர்ந்து உரையாற்றிய விமல் வீரவன்ச,


நல்லாட்சியினர் பிரிவினைவாதத்திற்கு பலத்தை வழங்கியுள்ளனர்.


சிவாபசுபதி இலங்கைக்கு வருகைதந்து புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தலையீடு செய்வதற்கான சந்தர்ப்பதை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.


புலிகளின் சின்னம் உள்ளிட்ட சேட்டை அணிந்து வடக்கில் இருக்க கூடியவாறு சூழல் மாறுபட்டுள்ளது.


நாட்டை பாதுகாத்த இராணுவத்தினரை வடக்கில் வடிகாலை சுத்தப்படுத்துமாறு கூறுகின்ற அளவிற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பலம் கிடைத்துள்ளது.


பிரிவினைவாதம், இனவாதம் கடும்போக்குவாத குழுக்கள் இந்த வருடத்தில் பலம் பெற்றுள்ளன சூரூஸ் என்பவர் உலகில் உள்ள நிதி மோசடியாளர். பல நாடுகளின் கறுப்புபட்டியலில் உள்ளடக்கப்பட்ட நிதி மோசடியாளர்.
அவரை சுற்றுலா பயணியாக கூட நாட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம் என மலேஷியா அறிவித்துள்ளது. நாடுகள் பலவற்றை கீழ் நிலைக்கு கொண்டு சென்றவர் சூரூஸ்


ஐக்கிய நாடுகள் சபையிலுள்ள நிதி மோசடியாளர் இவர். அந்த நிதி மோசடியாளரை தான் இன்று பொருளாதார பின்னடைவை இல்லாது செய்யும் பெரிய தேவ தூதராக நல்லாட்சி அரசாங்கம் நியமித்துள்ளது.


இந்த அரசாங்கம் செல்லக் கூடிய பயணம் ஒன்று இல்லை என்பது இதன்மூலமே தெரிகின்றது.


பொய்யான விசேட உரைகள் மூலமும் கதைகள் மூலமும் இந்த நாட்டு மக்களை திருப்திப்படுத்துவதன் மூலம் அவர்களின் வயிற்றை நிரப்ப முடியும் என இவர்கள் நினைக்கின்றனர் என்றார்.

மனித உரிமைகள் கோரிக்கைகளை செவிமடுக்காமல், மரண தண்டனையை அமுல்படுத்துங்கள் - ரஞ்சன்





நாட்டில் அப்பாவி குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, கொலை செய்யப்படும் போது மனித உரிமைகள் ஆணைக்குழு நித்திரையில் இருந்து விட்டு தற்போது குற்றமிளைத்தவர்களுக்கு மரண தண்டைனையை வழங்க வலியுறுத்தும் போது கூச்சலிடுவதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.


மரணதண்டனையை தடை செய்யக்கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கபட்டமை தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இது தொடர்பாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.


அத்துடன், கொழும்பு 7 இல் உள்ள மனித உரிமைகள் ஆணையகத்தில் உள்ள அலுவலகத்திலுள்ளவர்கள் சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட போது சிறிதளவேனும் வேதனைப்படவில்லை.


ஏனெனில், அவர்களது குழந்தைகள் மிகவும் சொகுசாக வாழ்வதால் அவர்களுக்கு அப்பாவி குழந்தைகள் பற்றி அக்கறையில்லை.


அவர்களது இல்லங்களில் சீ.சீ.டி.வீ யின் மூலம் அவர்களது குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கின்றது.


எனவே, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கோரிக்கைகளை ஜனாதிபதி செவிமடுக்காமல் குற்றமிழைத்தவர்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துமாறு தான் கோருவதாகவும் ரஞ்சன் ராமநாயகக்க தெரிவித்துள்ளார்.

க.பொ.த. (உ/த) வர்த்தகப்பிரிவில் நிந்தவூர் மாணவி பாத்திமா நிஹ்லா 2ம் இடம்.

Written By ADMIN on Sunday, January 3, 2016 | 8:02 AM





(சுலைமான் றாபி)


வெளியாகியுள்ள க.பொ.த. (உ/த) பரீட்சை முடிவுகளின் படி நிந்தவூர் அல் மஷ்ஹர் பெண்கள் உயர்தரப்பாடசாலையில் வர்த்தகப்பிரிவில் கல்வி பயின்ற மாணவி ஜே.பாத்திமா நிஹ்லா 3A சித்திகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் 2வது மாணவியாக சித்தியடைந்து சாதனை படைத்துள்ளார்.


இதேவேளை இதுவரைக்கும் வெளியாகியுள்ள முடிவுகளின் படி நிந்தவூரில் 04 மாணவிகள் 03A சித்திகளைப் பெற்றுள்ளனர். அதில் வர்த்தகப்பிரிவில் ஜே.பாத்திமா நிஹ்லா, மாவட்ட ரீதியில் - 02ம் இடத்தினையும், என். பாத்திமா ஜுமானா மாவட்ட ரீதியில் - 15ம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.


மேலும் கலைப்பிரிவில் எம்.வி.பாத்திமா ஜிஸ்னா, மாவட்ட ரீதியில் - 15ம் இடத்தினையும், எம்.யூ.இஸ்ஸத் ஜஹான், மாவட்ட ரீதியில் - 02ம் இடத்தினையும் பெற்று 03A சித்தியெய்துள்ளனர்.

A/L பரீட்சையில் தேசிய மட்டத்தில் 3 முஸ்லிம் மாணவர்கள், மகத்தான சாதனை (விபரம் இணைப்பு)




2015ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (03) காலை வெளியாகியுள்ளன.


அகில இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல்


உயிரியல் விஞ்ஞான பிரிவு


1 ஆம் இடம் – கே.பி.ஜி. தெபுலி உமேஷா – கம்பஹா ரத்னாவலி மகளீர் கல்லூரி
2 ஆம் இடம் – ஜே.எம்.மொஹமட் முன்சீப் – புத்தளம் ஜனாதிபதி கல்லூரி
3 ஆம் இடம் – யசஸ்வி வத்சலா – கொழும்பு விசாகா மகளீர் கல்லூரி


கலைத் துறை

1 ஆம் இடம் – கே.ஏ.ஜீவா நயனமாலி – குருநாகல் மல்லியதேவ மகளீர் கல்லூரி
2 ஆம் இடம் – நிராஷா நதீஷானி – கண்டி புஷ்பதான மகளீர் கல்லூரி
3 ஆம் இடம் – பாத்திமா அம்ரா – கொழும்பு 07, சீ.எம்.எஸ்.மகளீர் கல்லூரி

வணிக பிரிவு

1 ஆம் இடம் – எஸ்.எம்.அகில் மொஹமட் – குருநாகல் மல்லியதேவ ஆண்கள் கல்லூரி
2 ஆம் இடம் – சதனி இரங்கா – கொழும்பு தேவி பாலிக்கா கல்லுரி

3 ஆம் இடம் – ரன்தி ரமேஷ் – மொறட்டுவ புனித செபஸ்ட்டியன் கல்லூரி